மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 ஆவது வார்டு மாடக்குளம் மெயின் ரோடு சர்ச் மற்றும் மேக்ஸ் அப்பார்ட்மெண்ட் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தெரு விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்து உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் மாநகராட்சியில் தகவல் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு. இருழ் சூழ்ந்து இருப்பதால் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு சாதகமாக உள்ளது.
சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ள காரணத்தால் 6 மணிக்கு மேல் பெண்களும், பொதுமக்களும் வெளியே வருவதற்கே அச்சப்படுகின்றனர். இந்த சமூக விரோத செயல்களுக்கு மாநகராட்சி ஊழியர்களும் துணை போகிறார்களோ என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சுமார் ஒன்றரை கிலோமீட்டர் மீட்டர் அது அளவிற்கு தெரு விளக்கு எரியாமல் இருக்கிறது அதிகாரிகளிடம் சொல்லி பலமுறை சொல்லியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் தெரு விளக்கு எரிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.