5
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (52) இவர் மூச்சு திணறல் காரணமாக இன்று காலை வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய மருத்துவர்கள். பரிந்துரை செய்தனர். இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கூறியும் 3 மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் விஜயன் மருத்துவமனையில் உயிரிழந்தார் இதனை கண்டித்து உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.