6
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் சார்பில் ராமநாதபுரத்தில் இன்று (28.8.2020) ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமநாதபுரம் அரண்மனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் எம்எல்ஏ., மலேசியா எஸ். பாண்டி, தமிழக காங்., கமிட்டி உறுப்பினர் ஜெ.ரமேஷ் பாபு, தொழிலதிபர் செல்லத்துரை ஆகியோர் அப்துல்லா முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் டி.எம்.எஸ்.கோபி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாரிராஜன், மாவட்ட செயலாளர் துல்கீப், பேச்சாளர் கர்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன், இளைஞர் காங்., சரவணக்குமார்,மேகநாதன், முன்னாள் கவுன்சிலர் காமராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்
You must be logged in to post a comment.