Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மறைந்த திமுக தலைவர் டாக்டர் கலைஞர் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சமூக சமுதாய சேவகர்களுக்கு விருது…

மறைந்த திமுக தலைவர் டாக்டர் கலைஞர் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சமூக சமுதாய சேவகர்களுக்கு விருது…

by ஆசிரியர்

திமுக தலைவரின் அறிவுரையின்படி இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சமூக சேவைக்கான விருதை கொரரோனா காலத்தில் அன்று முதல் இன்று வரை கொரோனாவால் ஜாதி மதம் பேதமின்றி உயிரிழந்தவர்களை 15 நபருக்கு மேல் நல்லடக்கம் செய்திருக்கிறார்கள் இரட்டை சகோதரர்கள் அசாருதீன், நசுருதீன் இவர்களுக்கு மறைந்த திமுக தலைவர் கலைஞரின் இரண்டாம்ஆண்டு நினைவுநான் விருதாக வழங்கப்பட்டது.

இந்த  சமுக சேவைக்கான விருதை மாவட்ட கழகப் பொறுப்பாளர் காதர்பாட்ச முத்துராமலிங்கம் ஆலோசனையின்படி நகர் செயலாளர் S.A.H பஷீர் அஹமது மற்றும் வழக்கறிஞர் V.S ஹமீது சுல்தான் தலைமையிலும் மஹ்தூமியா பள்ளி தாளாளரும் நகர் மாணவரணி துணை அமைப்பாளர் இப்திகார் ஹசன் முன்னிலையிலும் இரட்டையர் சேவையை பாராட்டி பொன்னாடை போற்றி கேடையம் விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் துணை செயலாளர் ஜமால் பாரூக் மற்றும் கென்னடி, ராஜா, மரைக்காயர்,சித்திக், ஜபருல்லா, யூசுப், மஷாகிர், செல்வம், இளைஞர் அணி, சுபியான், பயாஸ்,நயிம் உள்ளிட்டேர் கலந்து கொண்டார்கள்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!