3
ஆகஸ்ட் 15 நாளை இந்தியா முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள வஉசி மைதானத்தில் சுதந்திர தினவிழா நடைபெறுகிறது.சுதந்திர தின விழாவின் முன்னோட்டமாக ஆகஸ்ட் 14 இன்று காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் , நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணன் உள்ளிட்டோர் , கலந்துகொண்டு காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.