பாசிங்காபுரம் கண்மாய் கரையில் கிடாய் சண்டை: 5 பேர் மீது வழக்கு

மதுரை மாவட்டம் பாசிங்காபுரம் கண்மாயில் கிடாய் சண்டை நடத்தியதாக 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.கண்மாயில் மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த கருப்பு, கருப்புச்சாமி, எர்ரம்பட்டியைச் சேர்ந்த மோகன், கிருஷ்ணமூர்த்தி, சோணை உள்ளிட்டோர் மீது அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்தும், பணம் ரூ. 25450, மேலும் ஒரு ஆட்டோ, கிடாய் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..