7
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு அரசு உயர் நிலைப்பள்ளிக்கு என்.ஆர்.ஜி.எஸ் திட்டத்தில் 470மீ சுற்று சுவர் புதியதாக கட்ட அரசு ரூ32 லட்சம் நிதீ ஒதுக்கியது. இந்த பள்ளி சுற்று சுவர் கட்டும் பணியை செங்கம் தொகுதி எம்.எல்.எ மு.பெ.கிரி பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடக்கிவைத்தார் நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணை தலைவர் சுமதி பிரபாகரன் மாவட்ட கவுன்சிலர் சகுந்தலா ராமஜெயம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.