Home செய்திகள் மேல்பெண்ணாத்தூர் குடிநீா் திட்டப் பணி: செங்கம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் கிராமத்தில் கிணறு வெட்டும் பணியை பூமி பூஜை செய்து செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடங்கி வைத்தார்.செங்கம் அருகே மேல் பெண்ணாத்தூர் சுற்றுப்புற வட்டாரங்களில் கிராம மக்களின் நீண்ட நாள் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க கிணறு வெட்டும் பணியை எம்எல்ஏ மு.பெ.கிரி பூமி பூஜை செய்து தொடக்கிவைத்தாா்.செங்கத்தை அடுத்த செங்கம் தொகுதிக்குட்பட்ட மேல் பெண்ணாத்தூர் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கிராம மக்கள் மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜய் மூலமாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரியிடம் முறையிட்டனா்.உடனடியாக கோரிக்கையை ஏற்று தொடா்ந்து, மேல் பெண்ணாத்தூர் பகுதியில் கிணறு வெட்டும் பணிக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திமுக மாவட்ட கழக செயலாளர் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து கிணறு வெட்டும் பணியைத் தொடக்கிவைத்தாா். நிகழ்விற்கு மேல் தனது ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் விநாயகம் முன்னிலை வகித்தார்.மேலும், சட்டமன்ற உறுப்பினர் பணியை தரமாகவும் விரைவாகவும் முடித்து கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா் வழங்கப்படும் என அவா் தெரிவித்தாா்.நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணை தலைவர் விசாலாட்சி வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் சகுந்தலா ராமஜெயம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாண்டியன், மேல் பெண்ணாத்தூர் திமுக செல்வம் மற்றும் திமுக பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!