மதுரையில் பழங்காநத்தத்தில் நியூ கிரியேஷன்ஸ் அமைப்பின் சார்பில் மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது.அங்கு நடந்த நிகழ்ச்சியில் நியூ கிரியேஷன்ஸ் தலைமை நிர்வாகி குளோரி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுநலன் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நற்பணிகளை வாழ்த்தி வழிகாட்டி மணிகண்டனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.பின்னர் அவர்கள் மனநல காப்பகத்தை நல்ல முறையில் நடத்தி வருவதை பாராட்டி குளோரி அவர்களிடம் இருபத்தி ஐந்து கிலோ அரிசியை வழிகாட்டி மணிகண்டன் வழங்கினார்.நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.