மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுகடந்த இரு தினங்களாக ஐடி கார்டு அணிந்து வருகிறார்.அவர் அணிந்திருக்கும் ஐடி கார்டின் மர்மங்கள் தற்போது வெளியாகியுள்ளன.கடந்த இரண்டு வாரங்களாக செல்வராஜு வின் மனைவிக்கு நோய் தொற்று ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார்.அவரது மனைவியை பார்ப்பதற்காக அமைச்சர் அடிக்கடி மருத்துவமனை சென்று வந்ததில் இவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டது.இருவரும் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு பூரண குணமடைந்து நேற்று முன்தினம் மதுரை வந்தடைந்தனர்.அமைச்சர் செல்லூர் ராஜு தற்போது நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது ஐடி கார்ட் அணிந்து வந்திருந்தார். அவர் அனைத்து நிகழ்ச்சிகளும் ஐடி கார்டுடன் வந்திருந்ததால் அனைவருக்கும்அவரை ஆச்சர்யத்துடன் பார்த்து வந்த நிலையில் அந்த ஐடி கார்டின் மர்மம் தற்போது வெளியாகியுள்ளது.இது சம்பந்தமாக விசாரித்தபோது அதில் ஆன்டிவைரஸ் என்னும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக மருத்துவமனையிலிருந்து பூரண குணமடைந்து செல்லும்போது மருத்துவமனையில் அணிவித்து வெளியே செல்லும்போது இதை அணிந்து செல்ல கூறியுள்ளார்கள்அதன்படி தொடர்ந்து வெளியே செல்லும்போது Anti Virus ஐடி கார்டை அணிந்து வருவதாக அமைச்சர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.