5
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி.வீட்டிலேயே பிஸ்கட் தயாரித்து வியாபாரம் செய்து வருகிறார்.இவருடைய மகன் கார்த்திக் (38). இவருக்கு இன்னும் திருமணமாக நிலையில் கார்த்திக் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தீராத வயிற்று வலியால் அவதிப் பட்டு வந்துள்ளார்.இததொடர்பாக பலரிடம் சிகிச்சை பெற்றும் பலனளிக்காத நிலையில் கார்த்திக் யாரும் இல்லாத நேரத்தில் தன் அறையில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.சம்பவமறிந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலையப் போலிசார் பிரேதத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.