பாரத சாரண சாரணியர் இயக்கம் – திருவண்ணாமலை மண்டல ஒருங்கிணைப்பாளர் பியூலா கரோலின் நியமனம்

பாரத சாரண சாரணீயம் – தமிழ்நாடு திருவண்ணாமலை மண்டலம் காணொளி வாயிலாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கம் மாநில சாரண ஆணையர் ஹரிஸ் எல். மேத்தா தலைமை தாங்கினார்.இறை வணக்கப் பாடலுடன் துவங்கப்பட்டது கூட்டத்திற்குது வந்த அனைவரையும் செஞ்சி மாவட்ட செயலாளர்.டி பாலமுருகன்அனைவரையும் வரவேற்றார்.மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டனர். செங்கம் மாவட்ட செயலாளர் திரு எம். வெங்கடேசன் காணொளி மூலமாக எவ்வாறு பயன்படுத்தி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதை மூலமாக விளக்கிப் பேசினார் அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் செயற்குழு உறுப்பினர் ஆர் சரஸ்வதி செயலி செயல்பாட்டினை குறித்து விளக்கினார்.திருவண்ணாமலை மண்டல பொறுப்பாளரும் திருவண்ணாமலை கல்வி மாவட்ட செயலாளரும் ஆகிய கா.பியூலா கரோலின் மாவட்ட செயலாளர்களின் பணிகள் குறித்து பவர்பாய்ண்ட் மூலமாக மாநில வழிகாட்டல் படி விளக்கமாக கூறினார்.

சாரண மாநில பயிற்சி ஆணையர் கே கே வெங்கட்ரமணன் அவர்கள் இனைவழி நடைபெறுகின்ற பயிற்சிகளையும் அதில் அனைவரும் பதிவு செய்து பங்கேற்பதற்கு மாவட்ட செயலர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கூறினார் .இக்கூட்டத்தில் மாநில உதவி செயலாளர் வி வடமாலை அனைவரையும் வாழ்த்தி பேசினார் மற்றும் மாநில உதவி பயிற்சி ஆணையர் இரு இளைய குமார் வாழ்த்திப் பேசினார் செயலாளரிடம் இருந்து கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டது. போளூர் கல்வி மாவட்ட செயலாளர் தட்சணாமூர்த்தி கூட்டத்தில் கலந்துகொண்ட கூறினார். திருவண்ணாமலை மாவட்ட செயலர் பியூலா கரோலின் தனது சேவையினால் .புதிய மண்டல பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டனர் திருவண்ணாமலை கல்வி மாவட்ட செயலாளர் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..