கீழக்கரை ஹமீதியா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கொரோனோ விழிப்புணர்வு முகாம்…

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் அறிவுரையின்படி கீழக்கரை நகர் பகுதி முழுவதும் கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து இன்று (15/07/2020) ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அப்பள்ளி சுற்றியுள்ள பகுதி மக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்தனர். முகாமில் பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு பின்னர் சத்து மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டன.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு

புனித ரமலான் வாழ்த்துக்கள்..