மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு ஆனது மேலும் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு ஆகவே அமுலில் இருக்கும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது .அதையும் பொருட்படுத்தாமல் தேவையில்லாமல் வானத்தில் சுற்றும் நபர்களை பிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். மேலும் என்றுமில்லாத அளவு நேற்று 464 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் மதுரை மாநகரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்..மேலும் அனாவசியமாக சுத்தம் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதும் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்டவைகளை மதுரை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள் …அதன் ஒரு பகுதியாக முதலில் சுப்பிரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பழங்காநத்தம் ரவுண்டானா அருகே காவல் ஆய்வாளர் கலைவாணி… தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.. இதில் தேவையில்லாத சுற்றிய, வாகனங்களுக்கு அபராதம் விதித்தது மற்றும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள், மேலும் முக கவசம் அணியாமல் வருபவர்கள், மீது எச்சரித்து அவர்களுக்கு அபராதம், ரூபாய்200, விகிதம் விதிக்கப்படுகிறது, இதுபோன்று மதுரை மாநகர் முழுவதும் அதிரடி நடவடிக்கைகள் மதுரை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்,
செய்தியாளர் .வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.