திருபுவனம் சார்ந்த சகோதரர் தனக்கு குழந்தை பிறந்த சந்தோசத்தின் வெளிப்பாடாக மரக்கன்று நடும் விழாவிற்கு ஆக கூடிய செலவை நன்கொடையாக பேரவையினர்க்கு வழங்கினார்..அதன் மூலம் திருபுவனம் இளைஞர் பேரவையின் சார்பில் மரக்கன்று நடுவிழா நடைபெற்றது.அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் இரண்டாம் கட்டமாக பரவலாக நமது தெருக்களில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டது.இந்த மரக்கன்றுகள் கடந்த காலங்களில் நமதூரில் விபத்தில் இறந்த சகோதர்களான நபில் த/பெ கமருல் ஜமான் நபில் த/பெ ஜான் முஹம்மது மைதீன் த/பெ ஜமால் முஹைதீன் இவர்களின் நினைவாக வைக்கப்பட்டது.
தன்னலம் இல்லா பொதுநலம் என்ற அடிப்படையில் இளைஞர் பேரவையின் செயல்பாடுகள் தொடரும் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் நமது திருபுவனம் ஜமாத்தை சார்ந்த பல்வேறு சகோதர்கள் பங்குபெற்று தங்கள் கரங்களால் செடிகளை நட்டார்கள்.இந்த நிகழ்ச்சியை சஹாபுதீன், அபுதாஹிர்,ஜாஸிம் அன்சாரி,முஹம்மது லெஸின்,சையது இப்ராஹிம்,சாபிர் அலி,அஹமத் யாசர்,இர்ஷாத்,சமீர் ,முஹம்மது நைப் ,அய்யூப்,யாசின்,தௌபிக் ஷா,ஜெஹபர் சாதிக் ,முஹம்மது ரஃபி,ஜாஸம் ரபீக்,ஜுபைர் ,இர்பான் ,சர்ஜூன்,சபீக் இக்பால்,பைஜூதீன் போன்றவர்களும் மேலும் ரியாஸ்,அன்சாரி,ரியாஜ் ஹாரிஸ்,சமிர்ஷா,ராஷித்,அனஸ்,சதாம்,தம்பிராஜா,தௌபிக் குல்,தௌபிக் மஸ்தான்,மஹசிக்,அஜிஹர்,ஆஷிக்,இர்ஷாத்,இன்னும் பல சகோதர்கள் ஒன்றிணைந்து சிறப்பாக நடத்தினார்கள்.
You must be logged in to post a comment.