தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு காவல்துறை தீவிர கண்காணிப்பு விதிமீறல் மீது கடும் நடவடிக்கை….. மதுரை மாநகர் முழுவதும் இன்று தரவு கற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. இது தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. எனினும் மதுரை மாவட்டத்தைப் பொறுத்தளவில் மதுரை .நகருக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும். குறிப்பாக கோரிபாளையம் பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் எஸ் எஸ் காலனி காளவாசல் புதூர் அண்ணாநகர் கேகே நகர் தெற்கு வாசல் தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துமீறி வரும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் வெளியே வரவில்லை .இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.