செங்கம் அருகே குடும்பத்தகராறில் 8 மாத கர்ப்பிணி அடித்துக் கொலை?உறவினர்களை கைது செய்யக் கோரி சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பள்ளிப்பட்டில் குடும்பத்தகராறில் 8மாத கர்ப்பிணி அடித்துக் கொலை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி சோபனாவை கணவர் மணிகண்டன் அடித்ததில் மயங்கி விழுந்துள்ளார். மயக்கமடைந்த நிலையில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட சோபனா உயிரிழந்துள்ளார். உறவினர்கள் புகார் அளித்த பேரில் மேல் செங்கம் காவல்துறையினர் மேல் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு சோபனாவின் உடலை அனுப்பி வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பள்ளிப்பட்டில் குடும்பத்தகராறில் 8மாத கர்ப்பிணி அடித்துக் கொலை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி சோபனாவை கணவர் மணிகண்டன் அடித்ததில் மயங்கி விழுந்துள்ளார். மயக்கமடைந்த நிலையில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட சோபனா உயிரிழந்துள்ளார். உறவினர்கள் புகார் அளித்த பேரில் மேல் செங்கம் காவல்துறையினர் மேல் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு சோபனாவின் உடலை அனுப்பி வைத்தனர் என்னை தொடர்ந்து, மர்மமான முறையில் இறந்த கர்ப்பிணி பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்ட நிலையில் மாமனார் மற்றும் மாமியார் உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி செங்கம்- நீப்பத்துறை சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..