MASA நடத்திய கிராத் மற்றும் மற்றும் கட்டுரை போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா…

MASA நடத்திய கிராத் மற்றும் மற்றும் கட்டுரை போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா 8/07/2020 அன்று தனிநபர் இடைவெளியுடன், முக கவசம் அணிந்து அரசாங்கம் வகுத்த வழிமுறைகளுக்கு உட்பட்டு நணைபெற்றது

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு சுகாதார அடிப்படையில் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்தி கொள்ள வலியுறுத்தப்பட்டது.

இந்த பரிசளிப்பு விழாவை பழைய குத்பா பள்ளி ஜமாத்தின் தலைவர் செய்யது அப்தாஹிர் தொடங்கி வைத்தார்,  மக்தூமியா மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் இப்திகார் ஹசன் தலைமை தாங்கினார்.  பழைய குத்பா பள்ளியின் செயலாளர் ஜெய்னுதீன் மற்றும் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஹசனுதீன் முன்னிலை வகித்தனர், இதை தொடர்ந்து MASA தலைவர் அகமது முகைதீன் வரவேற்புரை வழங்கிளார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை MASA உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக MASA அமைப்பு செயலாளர் சிராஜ்தீன் நன்றியுரையுடன்  விழா நிறைவடைந்தது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..