சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு கொந்தகை. மணலூர். அகரம். கீழடி. உள்ளிட்ட நான்கு இடங்களில் நடைபெற்று வருகிறது, சுரேஷ் என்பவரை நிலத்தில். நான்கு குழிகள் தோண்டப்பட்டது. 10முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.இதில் 3தாழிககல் உள்ள எலும்புக்கூடுகள் வெளியே எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடந்த மாதம் 19ம் தேதி ஒரு குழந்தையின் முழு அளவிலான எலும்புக்கூடு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தமிழக தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் நடந்த அகழாய்வில் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு 95 சென்டிமீட்டர். முழு அளவில் கிடைத்துள்ளது முதுமக்கள் தாழிகள் முதல் நிலை இரண்டாம் நிலை மூன்றாம் நிலை என மூன்று வகையாக உள்ளன முதல்நிலை ஆனது பராமரிக்க முடியாத முதியோர்களை உணவு தண்ணீர் வைத்து அப்படியே புதைப்பது. இரண்டாம் நிலை. வேறு இடத்தில் அடக்கம் செய்தவர்களின் எலும்புகளை தோண்டி எடுத்து தாழியினுள் வைத்துப் புதைப்பது கொந்தையில் கிடைத்து வருவது.2ம் நிலை வகையை சேர்ந்தது என கூறப்படுகிறது,, நேற்று கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் எலும்புக்கூடு. நேரடியாக புதைக்கப்பட்ட.3ம் நிலை என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் இந்த எலும்புக்கூட்டின் மரபணுவை. பல்வேறு அறிவியலுக்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில். உள்ள உயிரியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய உள்ளார்கள் ஆய்வுகள் நடத்தினால். குழந்தை. ஆணா பெண்ணா. வயது காலம் போன்றவைகள். துல்லியமாக அறிய முடியும்…….
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.