4
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப் புத்தூர் ஊராட்சியில் முளையம் பட்டினம் கிராமத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தீவிர தொண்டர் செல்வகுமார் கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் குடும்பத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்த நிலையில், விடுதலை சிறுத்தை கட்சி வணிகர் அணி மாநில துணை செயலாளர் விஜயராஜன் தலைமையில் செல்வகுமாரின் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.இதில் வணிகர் அணி மாவட்ட செயலாளர் அப்துல் ரவுப், வணிகர் அணி மாவட்ட துணை செயலாளர் வேதா ஸ்டாலின், வணிகர் அணி ஒன்றியம் சிறுத்தை சிவா, அரங்கநாதன், சேகுவாரா, யுவராஜ், விமல், மகிபாலன், ஐயப்பன், பாலகுரு விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.
You must be logged in to post a comment.