Home செய்திகள் ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டு காலம் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை.

ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டு காலம் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை.

by mohan

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டு காலம் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.அன்சர் மில்லத் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் எஸ்.எம்.அன்சர் மில்லத் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் மேலாக உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரியும், சட்டமன்றத்தில் பலமுறை தீர்மானங்களின் அடிப்படையில், முன்னாள் பாரதப் பிரதமர் கொலைவழக்கில் 30 ஆண்டுகாலம் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்யக் கோரியும் மற்றும் இஸ்லாமிய பெயர் இருப்பதாலேயே 25 ஆண்டுகளாக இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை தண்டனை முடிந்த சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும் இன்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை முன்வைக்கிறது . மனுவை தமிழக முதல்வர் கருணை அடிப்படையில் பரிசீலிக்க வேண்டுகிறோம் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!