மதுரை மாநகர சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர் கலைவாணி. இவர் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதும் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மதுரை கோவலன் நகர் மற்றும் டிவிஎஸ் நகர் ராஜம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கவசம் அணியாமல் வந்து கொண்டிருந்த பொது மக்களிடையே இலவசமாக வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் வெளியே வரும் நபர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். நோய்த்தொற்றின் தீவிரத்தையும் அப்பகுதி மக்களிடையே விளக்கி கூறினார். இதனை தொடர்ந்து அவரை முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கினார், இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.