மதுரையில் கொரோனா பீதியால், சுகாதார பணியாளர் வீட்டிலே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுபற்றி போலீசார் கூறியது:மதுரை அருகே ஆனையூர் காலங்கரையில் வசிப்பவர் மாரியப்பன் 55. இவர் அப்பகுதியில் சுகாதார பணியாளராக பணியாற்றி வந்தார்.இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததாம். இதனால் அவர், தனக்கு கொரோனா இருக்குமோ, என்ற அச்சத்தில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.இதுபற்றி, கூடல்புதூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.