டிரைவர் சுப்புராஜ் என்பவர் ஆந்திராவில் இருந்து லாரியில் சிமெண்ட் ஏற்றி வந்து குறிப்பிட்ட அளவு சிமெண்டை திண்டுக்கல்லில் இறக்கிவிட்டு மீதம் உள்ளதை வத்தலக்குண்டில் இறக்குவதற்காக திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டை பிரிவு அருகே இரவு சுமார் 2 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் டீரைவர் காயமின்றி உயிர்தப்பினார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்
You must be logged in to post a comment.