10
விருதுநகரில் இந்திய தொழிற்சங்கம் சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் தொழிலாளர்களை நசுக்கி பன்னாட்டு முதலாளிகளை வாழவைக்கும் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றக்கூடாது, வேலை இழந்த தொழிலாளர்களுக்கு ரூபாய் 12,500 வழங்க வேண்டும் எனக் கூறியும், பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என கோரி இந்திய தொழிலாளர் மையம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்க மையத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் கவசம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.