மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் கொரனோ பெயரைச் சொல்லி நாட்டை நாசப்படுத்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற் சங்கம் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் சுமார் பத்து இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.மயிலாடுதுறை தபால் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் கார் ஆட்டோ டாக்ஸி மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட 10 பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில் எல்பி எஃப் சி 878 ஐஎன்டியூசி, ஏஐசிசி, டியூ உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டனர்.
இதில் ஹெல்பிஎஸ் மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீதர், கட்டுமான தொழிலாளர் சங்க ஜகன் முருகன் எல் கே, மாவட்ட செயலாளர் சேரன் செங்குட்டுவன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன்திமுக நகர துணை செயலாளர் ஆர் கே சங்கர்சிஐடியுமாவட்ட பொருளாளர் ரவீந்திரன்உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.
You must be logged in to post a comment.