கொரானாவை கண்டறிய வீடு வீடாக சென்று பரிசோதனை.. மதுரை சிறப்பு அதிகாரி பேட்டி

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துறை அரசு அலுவலர்களுடன் கோவிட்..19..கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:மதுரை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான், இந்த நோயை கட்டுப்படுத்த இயலும். சுகாதார பணியாளர்கள் வீடுகளுக்கு வரும்போது தகுந்த ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.இந்த ஆய்வுக் கூட்டத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன், மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி, கூடுதல் ஆட்சியர் பிரியா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..