விடுதலை சிறுத்தைகள் கட்சி கீழக்கரை நகரில் புதிய உறுப்பினர்கள் இணைப்பு.. நகர் தலைமையின் கீழ் ஒன்றுபட்டு செயல்பட அறிவுறுத்தல்..

கீழக்கரையில் பல இளைஞர்கள் இன்று (01/07/2020) விடுதலை சிறுத்தை கட்சி  செயலாளர் பாசித் இலியாஸ் மற்றும் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில்  பட்டாணி அப்பா பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் விடுதலை  சிறுத்தை கட்சி உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.

மேலும் தமிழகத்தில் பல் வேறு சமுதாய பிரச்சினைகள், சமூக சேவை பணிகள் மற்றும் கொரோனோ நோயால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினைகளை ஒற்றுமையுடன் செயல்படும் வண்ணம், இராமநாதபுரம் மாவட்ட நகர் நிர்வாகிகள மற்றும் உறுப்பினர்கள்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கட்சியின் கட்டுபாடு மற்றும் ஒற்றூமையை உணர்த்தும் வண்ணம், சமூக பணிகளை தனி குழுவாக அல்லது தனி நபராகவோ செயல்படாமல், அந்த பகுதி நகர் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..