கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக கீழக்கரை அரசு மருத்துவமனையில் கரோணா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பொருட்கள் ரோட்டரி சங்க தலைவர் மூர் ஹசனுதீன் தலைமையிலும் சங்க பட்டயத்தலைவர் டாக்டர் அ.அலாவுதீன் முன்னிலையிலும் கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் பொருட்கள் கீழக்கரை தலைமை அரசு மருத்தவர் டாக்டர் ஜவாஹிர் ஹீசைன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திலும் , முகம்மது சதக் பாலிடெக்னிக் வளாகத்திலும் மரம் நடும் விழா நடைபெற்றது.இவ்விழாவில் ரோட்டரி சங்க செயலாளர் எபன் பிரவின் குமார், பொருளாளர் முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் தலைவர் டாக்டர் ராசீக்தீன், டாக்டர் சுந்தரம், முன்னாள் செயலாளர்கள் சதக்கதுல்லா, ஹசன், தவமணி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு
You must be logged in to post a comment.