இராஜபாளையம் அருகே முகவூர் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகேயுள்ள முகவூர் பஞ்சாயத்துக்குட்பட்ட அம்பேத்கர் காலனி தொண்டைமான் குளம் உள்ளது இதன் அருகே குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த பகுதியில் கண்மாயில் 22 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதைப் பார்த்த பொதுமக்கள் முகவூர் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி தகவல் கொடுத்துள்ளனர். அவர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். வனத்துறையினர் வருவதற்க்கு முன்பாகவே அப்பகுதி பொதுமக்கள் பாம்பை பிடித்து வைத்திருந்தனர். வனத்துறையினர் வந்தவுடன் அவர்களிடம் இந்த மலைப்பாம்பை ஒப்படைத்தனர். வனத்துறையினர் பாம்பை மீட்டு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
இதேபோன்று இதே பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீனுக்கு வலை போட்டு இருந்த பொழுது அதில் இரண்டு மலைப்பாம்புகள் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. குடியிருப்பு பகுதியில் இவ்வளவு பெரிய மலைப் பாம்பு வருவது பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.