5
மாற்று திறனாளி நபர்களுக்கு தமிழக அரசு பொருளாதார உதவி வழங்க உள்ளது. இந்த உதவியானது ₹1000/ – ரொக்கமாக வழங்க இருப்பதாக கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து தெரிவித்துள்ளார.
இதுகுறித்து அவர் கூறிகையில் “கீழக்கரை பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி நபர்கள் அரசு உதவி பெற விரும்பினால் தங்களது மாற்றுத் திறனாளி அட்டை நகல், (ஒரிஜினலை காண்பிக்க வேண்டும்.), குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய நகல்கள் அனைத்தையும் கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கொடுத்து தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.1000 பெற்றுக் கொள்ளலாம் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது ” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தகவல்:- மக்கள் டீம்
You must be logged in to post a comment.