Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஸ்ரீவில்லிபுத்தூரில் சரணாலயத்திற்க்குள் புகுந்து நாட்டு வெடிகுண்டு வீசி விலங்குகள் வேட்டை.. ஒருவர் கைது… இருவர் தப்பி ஓட்டம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் சரணாலயத்திற்க்குள் புகுந்து நாட்டு வெடிகுண்டு வீசி விலங்குகள் வேட்டை.. ஒருவர் கைது… இருவர் தப்பி ஓட்டம்..

by ஆசிரியர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சரணாலயத்திற்க்குள் புகுந்து நாட்டு வெடிகுண்டு வீசி மான் மற்றும் பன்றிகளை வேட்டையாடிய வாலிபர் கைது….தப்பியோடிய இருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மான்கள் மற்றும் பன்றியை வேட்டையாடிய நபரை வனத்துறையினர் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் யானை, புலி ,மான், காட்டெருமை ,சாம்பல் நிற அணில்கள், உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியானது சாம்பல் நிற சரணாலயமாக உள்ளது. தற்போது கொரோணா ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆள் நடமாட்டம் இல்லாத சரணாலயப் பகுதிகளில் நுழையும் சமூக விரோதிகள் மான் முயல் காட்டுப்பன்றி உள்ளிட்டவைகளை வேட்டையாடி வருவது தொடர்கதையாகியுள்து.

இந்நிலையில் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்த நகர் காவல் நிலைய ஆய்வாளர் கருத்தபாண்டி மற்றும் போலீசார் சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரிக்கையில் அவரிடமிருந்து 50 கிலோ மான் கறியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மான் கறியையும் பிடிபட்ட நபரான காளிராஜ் என்பவரையும் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

அதனைத்தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் காளிராஜ் மற்றும் இருவர் சேர்ந்து பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியான குன்னூர் பீட் பகுதியில் இரண்டு மான்கள் மற்றும் ஒரு பன்றியை வேட்டையாடியது தெரியவந்தது. அதனை அடுத்து காளிராஜை கைது செய்த வனத்துறையினர் அவரிடமிருந்து இரண்டு மான் தலைகள் 50 கிலோ மான் கறி மற்றும் தலையில்லாத பன்றி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட 7 நாட்டு வெடிகுண்டு மற்றும் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவைகளையும் கைப்பற்றிய வனத்துறையினர் தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.இரண்டு மான்கள் மற்றும் ஒரு பன்றி வேட்டையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!