இராமநாதபுரம் மாவட்டத்தில் 400ஐ கடந்த கொரானா தொற்று…

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா தொற்று பரவல் கடந்த இரண்டு வாரங்களாக இரட்டை இலக்கத்தில் தினமும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் ஆயுதப்படை வீரர் 2 பேர், தொண்டி கடற்படை முகாம் பாதுகாப்பு பணிக்குச் சென்ற சிறப்பு போலீஸ்காரர் நெடுங்குறிச்சியைச் சேர்ந்த 23 வயது கர்ப்பிணி,  கீழக்கரையில் 80 வயது முதியவர்,  நகரிகாத்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன், 14 வயது சிறுமி, வெள்ளையாபுரத்தில் 10 வயது சிறுமி உள்பட 35 ஆண்கள், 22 பெண்கள் என 57 பேருக்கு கொரானா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா பாதித்தோர் எண்ணிக்கை 407 ஐ எட்டியது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..