திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் நேற்று முன்தினம் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட முத்துச்செல்வம் கொலைவழக்கில் 4 பேர் கைது . தலைமறைவாக உள்ள நீதியை தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் தந்தை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் அவா என்ற முத்துச்செல்வம் (வயது 22) முத்து செல்வத்தின் மீது அவனியாபுரம், பெருங்குடி, மதுரை மாநகர் பகுதிகளில் பல்வேறு கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த வருடம் மார்ச் 29ம் தேதி கொள்ளப்பட்ட பாமக பிரமுகர் இளஞ்செழியன் தம்பி மாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி அவா முத்துச்செல்வம்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று 5 பேர் கொண்ட கும்பல் அவரை விரட்டியது இதில் பைக்கில் வந்த முத்துச்செல்வம் தந்தை பெரியார் நகர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே எதிரிகளிடம் சிக்கியதில் சரமாரியாக வெட்டி தலையை அறுத்து தனியாக வைத்துவிட்டு சென்றுவிட்டனர் .
இது தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். போலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் நீதி, அன்பு, முத்துராஜா, கார்த்தி, பாட்சா என்ற சரவணன் உள்பட ஐந்து பேர் குற்றவாளிகள் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அன்பு, முத்துச்செல்வம். கார்த்தி ,பாட்ஷா என்ற சரவணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர் மேலும் தலைமறைவாக உள்ள நீதியை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.