Home செய்திகள்கீழக்கரை செய்திகள் சாத்தூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது..

சாத்தூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது..

by ஆசிரியர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் சுமார் 300 பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.  அதில் பணிபுரியும் ஆண் பணியாளர்கள் தங்களின் உடல் அசதியை குறைக்க மது மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

சாத்தூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யபட்ட கஞ்சா அதிகளவில் விற்பனை செய்யபடுவதாகவும் அதை இளைஞர்கள் பெரியளவில் வாங்கி பயண்படுத்தி வருவதாக சாத்தூர் நகர் காவல் உதவி ஆய்வாளர் ராமசாமிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  சாத்தூர்-சிவகாசி சாலையில் வீரபாண்டியபுரத்தில் உள்ள தனியார் பட்டாசு கடை அருகே இருந்த நபரை விசாரித்த போது அவர் கருவேல முள் பகுதியில் மறைத்து வைத்திருந்த பொட்டலத்தை கைப்பறி விசாரித்த போது மேட்டமலையை சேர்ந்த மயில்ராஜ்(55) என்று தெரிவித்தார்.

அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலத்தை பிரித்து பார்த்த போது அவற்றின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும். விற்பணைக்கு வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து மயில்ராஜ்யை சாத்தூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!