முறையாக குடிநீர் வழங்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை. தங்களது குறைகளை சொல்ல வந்த பொது மக்களை சந்திக்க ஆணையாளர் மறுத்தால் விரக்தியுடன் திரும்பிய பொதுமக்கள்.
தமிழகம் முழுவதும் கோடைகாலம் முடிந்தும் குடிநீர் பஞ்சம் அதிகளவில் நிலவி வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியில் சென்று தண்ணீர் சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் குடிநீர் பஞ்சம் மறைமுகமாக தமிழகத்தை பாதித்து வருகிறது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் வினியோகம் முறையாக நடைபெறவில்லை. 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருவதாகவும் அவ்வாறு குடிநீரும் சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே விநியோகிக்கப் படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என முறையிட வந்த பொதுமக்களை நகராட்சி ஆணையாளர் தன் அறைக்குள் நுழைய விடாமலும் அவர் வெளியில் வந்து சந்திக்காமல் அலட்சியமாக தனது உதவியாளர் மூலம் அவர்களை வேறு எங்காவது போய் தங்கள் குறைகளைச் சொல்ல சொல்லுங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த பொதுமக்கள் ஆணையாளர் அலுவலகம் அருகே உள்ள பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று தங்களது குறைகளை தெரிவித்து விட்டு நகராட்சயை விட்டு விரக்தியுடன் வெளியேறினர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.