இராஜபாளையம் அருகே வறுமையில் வாழும் 230 குடும்பத்திற்க்கு அமமுக சார்பில் அத்தியாவசிய உணவு பொருட்களை மத்திய மாவட்ட செயலாளர் வழங்கினார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சத்திரபட்டி, சங்கரபாண்டியபுரம், சம்சிகாபுரம், ஆகிய பகுதிகளில் வறுமையில் வாழும் 230 குடும்பங்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 5 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை மத்திய மாவட்ட செயலாளர் சாமிக்காளை வழங்கினார், மற்றும் மாவட்ட இணை செயலாளர் ஜெயலட்சுமி, மாவட்ட மகளீர் அணிச் செயலாளர் கவிதா தனசேகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.