Home செய்திகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் வாழ்வாதரம் இழந்த முதியோர்களுக்கு இரண்டு நீதிபதிகள் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்..

கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் வாழ்வாதரம் இழந்த முதியோர்களுக்கு இரண்டு நீதிபதிகள் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்..

by Askar

கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் வாழ்வாதரம் இழந்த முதியோர்களுக்கு இரண்டு நீதிபதிகள் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியும் வட்ட சட்ட பணி குழு தலைவருமான வெற்றிமணி, மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி வானதி ஆகியோர் உத்தரவின்பேரில் சேத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஏழை-எளிய வயதான முதியோர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

அத்தியாவசிய பொருட்களை வழங்கிய நீதிபதிகள் பொதுமக்களிடம் பேசும் பொழுது, நம்முடைய முன்னோர்கள் காலத்தில் காலரா, பெரியம்மை நோய் பரவியபோது எவ்வாறு தனிமைப்படுத்தி கண்காணித்து தொற்று நோயில் இருந்து பாதுகாத்தோமோ அதை போல் தற்போதும் தனிமைப்படுத்தி முக கவசம் அணிந்து மஞ்சள் நீர், கிருமி நாசினி தெளித்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சேத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் குமார், சார்பு ஆய்வாளர் காளிராஜ் செய்திருந்தனர். விழாவில் இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாக சங்கர், தளவாய்புரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்,வி. காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!