ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு ஆட்டோ ஓட்டுனர் சாப்பிடும் போது சராமாரி அரிவாள் வெட்டு, முன் விரோதத்தில் வெட்டிய பார் ஊழியர் கைது!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் துடியாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் ஆட்டோ ஓட்டுனராக புரிந்து வருகிறார்.
இவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்க்கும் குன்னூரை சேர்ந்த முனீஸ்வரன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாரில் வைத்து ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இன்று பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மார்க் அருகே உள்ள தனியார் உணவு உணவு உணவகத்தில் முருகன் உணவருந்திக் கொண்டிருந்தார் அங்கு வந்த முனீஸ்வரன் முருகனை தலை இடது கை முதுகு உள்ளிட்ட ஏழு இடங்களில் அரிவாளலை வைத்து வெட்டியுள்ளார்.
தொடர்ந்து சம்பவ இடத்தைவிட்டு முனிஸ்வரன் தப்பி ஓடி விட்டார் அதனையடுத்து அருகிலிருந்தவர்கள் முருகனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த காவல் ஆய்வாளர் பவுல் ஏசுதாசன் தலைமையிலான நகர் காவல் துறையினர் வந்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முனீஸ்வரனை தேடி கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகன் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பொதுமக்கள் அதிகம் நடமாடும் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற அரிவாள் வெட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.