இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே வீரவனுரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண். திருமணமான இவர், 08/6/2020 மாலை 6 மணியளவில் தனது உறவினருடன் பூவிளத்தூர் காட்டு பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கார், இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் , இருவரையும் ஆபாசமாக பேசி, மிரட்டி காரில் கடத்திச் சென்றனர். தொடர்ந்து இருவரையும் மிரட்டி அப்பெண் அணிந்திருந்த இரண்டே கால் பவுன் டாலர் செயின், கால் பவுன் மோதிரம் இரண்டு, ரூ.10 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். மேலும் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.
இவர்களிடம் சிக்கி நகை, பணமம் இழந்து தொடர் சித்ரவதையால் தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்த அப்பெண்ணின் உறவினர் ஒருவர் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக கைபேசி எண்ணுக்கு தகவல் அளித்தார். இதன்படி எஸ்பி வருண்குமார் அறிவுறுத்தல் படி பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் தனிப்படை அந்த 6 பேரை பின்தொடர்ந்து சுற்றி வளைத்து பிடித்தனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் புகார் அடிப்படையில், பரமக்குடி பொன்னையாபுரம் ஓம் சக்தி நகரில் வசிக்கும் முத்துவயல் அப்துல் ரகுமான் மகன் முகமது சீதக்காதி 36, பொட்டி தட்டி காலனியைச் சேர்ந்த முனியசாமி மகன் இளஞ்செழியன் 23, ராமநாதபுரம் முதுனாள் வடக்கு தெரு ராஜகோபால் மகன் சேதுபாண்டியன் 24, பரமக்குடி முத்துச்செல்லாபுரம் பாண்டுவம் மகன் தனசேகரன் 30, பரமக்குடி முத்துச் செல்லாபுரம் பாண்டி மகன் அரவிந்த் 25, முத்துச்செல்லாபுரம் பிச்சை மகன் காளிதாஸ் 24 ஆகியோர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் இவர்கள் 6 பேரையும் இன்று (14.6.2020) கைது செய்தனர். விசாரணையில் பரமக்குடி, போகலூர், சத்திரக்குடி பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் தனிமையில் செல்லும் இளம்வயது பெண்கள், கணவனை பிரிந்த பெண்கள், கள்ளத்தொடர்பு வைத்துள்ள திருமணமான பெண்களை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அந்த பெண்களுடன் தொடர்பில் உள்ள ஆண்களுடன் உல்லாசமாக இருக்கும்போது ரகசிய வீடியோ எடுத்து தேவைப்படும் போதெல்லாம் மிரட்டி அப்பெண்களிடம் நகை, பணம் தொடர்ந்து பறித்து உல்லாசமாக இருந்தது தெரிந்தது. சொகுசு காரில் உல்லாசமாக வலம் வந்த இவர்கள் ராமநாதபுரம், போகலூர், பரமக்குடி பகுதிகளில் உள்ள காடுகளில் முயல், மயில் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி சமைத்து மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியது தெரிந்தது. போதை தலைக்கேறியதும் இவர்கள் குறி வைத்த பெண்களை அலைபேசியில் பேசி வரவழைத்து 6 பேரும் கூட்டு பாலியல் செய்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு செலவுக்கு பணம் தேவைப்படும்போது தங்கள் வலையில் சிக்கிய பெண்களை மிரட்டி பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். பணம் தர மறுத்தால் உல்லாசம் அனுபவித்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இது போன்ற கூட்டு செயல்களில் ஈடுபட்டு வந்த 6 பேர் மீது புகார் அளித்தால் தங்கள் வாழ்வு பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் கொடுக்க முன்வர வில்லை எனவும் தெரிந்தது. கைது செய்யப்பட்ட 6 பேரையும் சத்திரக்குடி இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
You must be logged in to post a comment.