Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் கொரோனா கோர தாண்டவம்-ஒரே நாளில் 18பேருக்கு தொற்று ஏற்பட்டதால் பரபரப்பு…

தென்காசி மாவட்டத்தில் கொரோனா கோர தாண்டவம்-ஒரே நாளில் 18பேருக்கு தொற்று ஏற்பட்டதால் பரபரப்பு…

by mohan

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 18பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தில் இதுவரை 155 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 90 பேர் பூரண குணமாகி அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர். மேலும் 25 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் தென்காசி மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தென்காசியைச் சேர்ந்த 31 வயது ஆண், கடங்கனேரியைச் சேர்ந்த 26 வயது, 39 வயது ஆண்கள், 20 வயது பெண், ஆலடிப்பட்டியைச் சேர்ந்த 64 வயது ஆண், 56 வயது பெண், ஆலங்குளத்தைச் சேர்ந்த 33 வயது பெண், 3 வயது சிறுவன், 9 வயது சிறுமி, ஏ.பி.நாடானூரைச் சேர்ந்த 22 வயது, 27 வயது ஆண்கள், இலஞ்சியைச் சேர்ந்த 23 வயது ஆண், செங்கோட்டையைச் சேர்ந்த 52 வயது பெண், தேவிபட்டணத்தைச் சேர்ந்த 55 வயது பெண், சங்கரன்கோவிலைச் சேர்;ந்த 31 வயது ஆண், சோலைச்சேரியைச் சேர்ந்த 21 வயது பெண் ஆகிய 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தென்காசி மாவட்டத்தில் தாண்டவமாடும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் அனைத்தும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. முககவசம் அணிந்த அவசரத் தேவைக்காக வெளியே சென்று வாருங்கள். அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.மேலும் தீயணைப்பு வீரர்கள் இரவு பகல் பாராமல் கொரோனா தொற்று பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனாவின் கோர தாண்டவத்தால் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!