7
மதுரையில் தெற்கு வாசலில் அமைந்துள்ள கிரைம் பிரான்ச் குற்றப்பிரிவு மகளிர் காவல் நிலையத்தில் மதுரை லேடிஸ் சர்க்கிள் 8 சார்பாக சிறுவர்,சிறுமிகளுக்கான விளையாட்டு சாதனங்கள், புத்தகங்கள் மற்றும் பொம்மைகளை வழங்கி, காவல் நிலைய சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்தனர்.இந்நிகழ்ச்சியை காவல் ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதம் அவர்கள் திறந்துவைத்தனர்.அவருடன் மதுரை லேடிஸ் சர்க்கிள் 8 ன் சேர்மன் சுகன்யா ரகுராம், விசாலாட்சி, மீனா,சீத்தல் மற்றும் கார்த்திக் உதவி ஆணையாளர் (சட்டம் ஒழுங்கு), ஜானகிராம்- ADSP,ஆய்வாளர் அனுஷியா,மதுரை மகளிர் குற்றப்பிரிவு காவல் நிலையம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.ஆனமலைஸ் டொயோட்டோ றிறுவனம் சார்பாக சண்முகம் மற்றும் ARC குழுமத்தினர் இந்நிகழ்ச்சிக்கான விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.