சமூக சேவையில் தொடர் பணியாற்றும் மாசா அமைப்பு..

OJM தெரு கோழியப்பா கடை அருகில் மீன் கடை செல்லும் வழியில் நான்கு சந்துகள் சந்திக்கும் இடத்தில் அடிக்கடி இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு வந்தது. இதை கவனத்தில் கொண்ட MASA அமைப்பினர் அந்த இடத்தில் வேகத்தடை வைக்க தீர்மானித்து நகராட்சியிடம் முறைப்படி அனுமதி கடிதம் கொடுத்து நகராட்சி பொறியாளர்  பார்வையிட்டு அனுமதி அளித்தவுடன் வேகத்தடை மாசாவின் நிதியிலிருந்து போடப்பட்டது.

அனுமதி கொடுத்த நகராட்சி ஆணையர், பொறியாளர் மற்றும் அனுமதி கிடைக்க உறுதுணையாக இருந்த மக்கள் டீம் காதருக்கு மாசாவின் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..