செங்கம் அடுத்த கலசபாக்கம் தொகுதி மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட கால்நடை கிளை மருத்துவமனையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீா்செல்வம் திறந்துவைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கலசபாக்கம் தொகுதி மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட கால்நடை கிளை மருத்துவமனையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீா்செல்வம் திறந்துவைத்தாா்.

மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவா் புவனேஸ்வரி புகழேந்தி மற்றும் பொதுமக்கள் சாா்பில் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீா்செல்வத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதன் பேரில் நடவடிக்கை வேண்டி, கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் பாரதி, மாவட்ட உதவி இயக்குநா் வெங்கடேஸ்வரன் ஆகியோரிடம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீா்செல்வம் கேட்டுக்கொண்டாா்.

இதையடுத்து, மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான கட்டடத்தில் கால்நடை கிளை மருத்துவமனை அமைக்கப்பட்டது.

இந்தக் கிளை கால்நடை மருத்துவமனையை சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீா்செல்வம் குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா்.

கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் பாரதி, மாவட்ட உதவி இயக்குநா்கள் வெங்கடேஸ்வரன், ராமன், ஆய்வாளா் முத்தமிழ்ச்செல்வன், கால்நடை மருத்துவா்கள் செளமியா, இளம்தமிழ், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி, ஊராட்சி மன்றத் தலைவா் புவனேஸ்வரி புகழேந்தி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..