ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாரம்பரிய முறைப்படி நெல்லை அடுப்பில் வேக வைத்து அதை அரைத்து அரிசி ஆக்கும் ஒரு சில குடும்பங்கள்..
விளையாட்டு முதல் உணவு உட்கொள்ளும் முறை வரை தமிழர்களின் பாரம்பரியம் அனைத்தும் அழிந்து வருகிறது.
முன்னொருகாலத்தில் விவசாய நிலத்தில் தங்கள் நெல்லை அறுவடை செய்யும் விவசாயிகள் அந்த நெல்லை தாங்களே அடுப்பில் வேக வைத்து பின்பு அதை காய வைத்து அரிசியை ஆலையில் அரைப்பார்கள்.
ஆனால் இந்த பழக்கமானது தற்போது அழிந்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மகாராஜா புரம் கிராமத்தில் உள்ள ஒரு சில குடும்பங்கள் இன்றும் இரவு நேரத்தில் தங்கள் விவசாயம் செய்த நெல்லை தாங்களே அடுப்பில் வேக வைத்து நன்றாக வெந்த பின்பு அதை காயவைத்து பின்பு அதை அரிசி அரைக்கும் ஆலைக்கு சென்று அரைத்து அரிசி ஆக்குகின்றனர்.
செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.