8
மதுரை உலகனேரியில் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது!
மதுரை உலகனேரி பி.கே திடலில், மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் ஏற்பாட்டில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண பொருளாக அரிசி மற்றும் காய்கறிகளை மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ரபீக் வழங்கினார்.
இதில்சிறப்பு விருந்தினராக ஏ.சி.குமரவேல் பங்கேற்றார். இந்நிகழ்வில் இணைச் செயலாளர் ஏ.பாண்டியன், துணைச் செயலாளர்கள் சேகர், ராஜபாண்டியன், ஹரிகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், திருப்பதி, செந்தில்குமார், ராஜேஷ்கண்ணா, இலங்கேஸ்வரன்,நகர நிர்வாகிகள் ஜாபர், பாலதம்புராஜ் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய ரஜினி ரசிகர் மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
கீழை நியூஸூக்காக, மதுரை கனகராஜ்
You must be logged in to post a comment.