பன்றிமலை ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தரமற்ற தார் சாலை:சறுக்கி விழுந்து காயமடையும் வாகன ஓட்டிகள்!
ஆத்தூர் தாலுகா பன்றிமலை ஊராட்சி பகுதியில் உள்ள அழகுமடைஓடை முதல் ஆதிமூலம் ஓடை வரை சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் ஒப்பந்த அடிப்படையில் தார்சாலை அமைக்கும் பனி நடைபெற்று முடிந்து சுமார் இருபது நாட்களே ஆன நிலையில் ஜல்லிகற்களை கைகளிலேயே கூட்டி அள்ளும் அளவிற்கு அந்த சாலைக்கு தார் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் வாகனஓட்டிகள் ஜல்லிகற்களின் சறுக்கலால் கீழே விழுந்து கை கால்கள் அடிபட்டு எழுந்து செல்லும் நிலையில் உயிர்பலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆகவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாலையை மறுசீரமைப்பு செய்துதந்து உதவுமாறு பன்றிமலை ஊராட்சி வாழ் பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
You must be logged in to post a comment.