Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மக்கள் நீதி மய்ய இராமநாதபுரம் நகர் நிர்வாகி தற்கொலை..

மக்கள் நீதி மய்ய இராமநாதபுரம் நகர் நிர்வாகி தற்கொலை..

by ஆசிரியர்

இராமநாதபுரம்  சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர் சரவணன்,40. மக்கள் நீதி மய்ய ராமநாதபுரம் நகர் துணை செயலாளராக இருந்தார்.

மேலும், ராமநாதபுரத்தில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை ஏஜென்ஸியில் ஏசி மெக்கானிக் ஆக கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்தார். இவரது மனைவி கோமதி. இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்ப சண்டை ஏற்பட்டது. இதனால் சரவணனுடன் கோபித்து கொண்டு, கோமதி திருநெல்வேலி சென்று விட்டார். இதனால் மனமுடைந்த  சரவணன்,  தனது வீட்டில் இன்றிரவு (06/06/2020) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின்படி பஜார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!