Home செய்திகள் சாத்தூரில் வாகன விபத்தில் நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி; விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை!

சாத்தூரில் வாகன விபத்தில் நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி; விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை!

by Askar

சாத்தூரில் வாகன விபத்தில் இருவர் பலி; விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகரில் ஜவுளி கடை நடத்திவரும் சந்திரசேகரன் மற்றும் அவரது நண்பர் பாலசுந்தரம் இருவரும் சாத்தூர் அருகே என்.சுப்பையாபுரம் நான்கு வழி சாலை அருகில் உள்ள தனியார் வங்கிக்கு வந்துள்ளனர்.

வங்கி பணிகள் முடிந்து அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் தங்களது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி விட்டு திரும்பும் போது மதுரையில் இருந்து கயத்தாரை நோக்கி சென்ற கார் இருசக்கர வாகனத்தில் மோதியதில் தூக்கி வீசபட்டு இருவருக்கும் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலே இருவரும் பலியானார்கள்.

தகவல் அறிந்து வந்த சாத்தூர் தாலுகா காவல் துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!