Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மஹ்தூமியா (MASA) சமூக நல அமைப்பு மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவு….

மஹ்தூமியா (MASA) சமூக நல அமைப்பு மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவு….

by ஆசிரியர்

ரமலான் நோன்பு மாதத்தில் கீழக்கரை மாசா சமூக நல சங்கம் மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் இணைந்து நடத்திய “சுதந்திரப்போரில் கீழக்கரையின் பங்கு”,  “அழகிய கீழக்கரை உங்கள் பார்வையில்”,  “மனிதநேய பணிகளில் கீழக்கரை” என்ற மூன்று தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது..

இக்கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரத்தை இன்று (05/06/2020) MASA – மஹ்தூமியா சமூகநல  அமைப்பு மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் வெளியிட்டுள்ளது.

முதல் பரிசு 3000 இரண்டாம் பரிசு 2000 முன்றாம் பரிசு 1000

பரிசு வென்றவர்களின் விபரங்கள்.

முதல் பரிசு ஜூமைலத் ரபிஹா

இரண்டாம் பரிசு பாத்திமா ஹசன், அமிரூன் பைஹா, மற்றும் முகம்மது ரய்யான் ஆகிய மூவருக்கும்.

மூன்றாவது பரிசு ரஹ்மத்துல் பசரா மற்றும் இபுறாகிம் ஹனிபா ஆகிய இருவருக்கும் வழங்கப்பட உள்ளது. மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு MASA – மஹ்தூமியா சமூக நல அமைப்பு மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் சார்பில் பரிசுகள் வழங்கப்படுகிறது.

கீழை நியூஸ் S.K.V சுஐபு

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!